search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டு பாடம்"

    • இதனால் கோபித்துகொண்ட மாணவி ராஜேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறினார்.
    • கிணற்றில் செருப்பு மிதந்துவதை பார்த்து ஊர் பொது மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே மேட்டத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மகள் ராஜேஸ்வரி (வயது 13). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது வீட்டில் உள்ள பாடம் படிக்கவில்லை என்று ராஜேஸ்வரியை திட்டி உள்ளனர். இதனால் கோபித்துகொண்ட மாணவி ராஜேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் வயல்வெளியில் உள்ள கிணற்றில் ராஜேஸ்வரி குதித்து தற்கொலை செய்தார். அப்போது வயல்வெ ளிக்குச் சென்றவர்கள் கிணற்றில் செருப்பு மிதந்துவதை பார்த்து ஊர் பொது மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் பொதுமக்கள் ஒன்று கூடி அங்கு பார்த்த போது கிணற்றில் பிணமாக மிதந்தவர் ராஜேஸ்வரி என தெரியவந்தது. திருநாவலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன், தனிப்பிரிவு தலைமை காவலர் மனோகரன்மற்றும் போலீசார் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறை அவரை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக விழுப்புரம் முண்டிய ம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    • வெயில் தாங்க முடியாமல் துடிக்கும் சிறுமியை பக்கத்து வீட்டு தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
    • சிறுமியின் தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டெல்லி கஜூரிகாஸ் பகுதியை சேர்ந்த பெண்ணின் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் மகள் (5) சரிவர வீட்டு பாடம் செய்யவில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், மகளின் கை மற்றும் கால்களை கயிறால் கட்டி வீட்டின் கூரையில் சுட்டெரிக்கும் வெயிலில் விட்டு சென்றுள்ளார்.

    வெயில் தாங்க முடியாமல் துடிக்கும் சிறுமியின் நிலையை பக்கத்து வீட்டு நபர் அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

    இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சிறுமி வெயிலில் துடிக்கும் வீடியோவைக் கண்டு சிறுமியின் தாயை மக்கள் திட்டி தீர்க்கின்றனர்.

    இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரியவந்ததை அடுத்து, சிறுமியின் தாய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டு பாடம் செய்யாததால் பெற்ற பிள்ளைக்கே கொடூர தண்டனை வழங்கிய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×